Saturday 6 August 2016

அதைச் சிந்தைவைத்தேன்


கந்தனென்றார் உன்னைக் கடம்பனென்றார்
          கருவினிலே அதைக் கேட்டுகந்தேன்
பந்தமென்றார் உள்ளத்தின் பாசமென்றார்
          பிரிவினிலே அதைப் பார்த்துகந்தேன்
அந்தமென்றார் முன்னையே ஆதியென்றார்
          அருமறையில் அதைக் கண்டுகந்தேன்
சந்தமென்றார் பாடுஞ்செந் தமிழுமென்றார்
          செழுமையிலே அதைச் சிந்தைவைத்தேன்  

No comments:

Post a Comment