Friday 5 August 2016

நானிலம் போற்றுவமே!



நாற்றி னிடை நீரில் வீழ்ந்து
          நாளுமே கிடந்து
சேற்றை மிதித்து செந்நீர் ஆக்கி
          செழுமையைக் கூட்ட
காற்றை யூட்டி களித்து ரசித்து
          கழனிகள் செய்து
நாற்றிசை தனில் நெல் விளைய
          நானிலம் போற்றுவமே!
இனிதே,
தமிழரசி.                                  

No comments:

Post a Comment