Thursday 18 August 2016

அருள் பொழிவாய்!


மற்றோர் அறியா வந்தென் மனத்திருந்து
          மாசறுக்கும் மருந்தே மண் உலகில்
கற்றோர் ஏத்தும் கரும்பே தேனே
          காமுற்றே உன்றன் கழலடி தேடும்
நற்றோர் இருக்க நயமிலா பாவியெனை
          நண்ணி மகிழ்வ தேனைய
அற்றோர் அறவோர் அன்போடு வப்ப
          அருள் பொழிவாய் அரன் மகனே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
மற்றோர் - பிறர்
மாசறுக்கும் - குற்றங்களை நீக்கும்
ஏத்தும் - புகழும்
காமுற்றே - விரும்பி
கழலடி - கழல் அணிந்த அடி[கழல்-வீரர்கள் காலில் அணிவது]
நயமிலா - சிறப்பு இல்லாத
நண்ணி - அருகேவந்து
அற்றோர் - பொருளற்றோர், கல்ல்வியற்றோர், ஏதும் இல்லாதவர்
அறவோர் - எல்லா உயிர்களிடத்தும்  அன்புள்ளோர்
உவப்ப - மகிழ.

No comments:

Post a Comment