Monday 29 August 2016

அடிசில் 105

பீட்ரூட் கறி
- நீரா - 
  

தேவையான பொருட்கள்: 
பீட்ரூட்  -  400 கி
வெட்டிய வெங்காயம்  - 1 மே. கரண்டி
மிளகு தூள்  -  ½ தேக்கரண்டி
பால்  -  2 மே.கரண்டி
எண்ணெய்  -  1  தேக்கரண்டி
எலுமிச்சம் புளி  -  1  தேக்கரண்டி
கறிவேப்பிலை கொஞ்சம் 
உப்பு தேவையான அளவு

செய்முறை:
1. பீட்ரூட் கிங்கின் தோலைச் சீவி நீக்கிக் கழுவி, சிறிய மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்க.
2. ஒரு பாத்திரத்தினுள் வெட்டிய பீட்ரூட், வெங்காயம், உப்புப் போட்டு எண்ணெயையும் சேர்த்து அரைக் கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். 
3. தண்ணீர் வற்றிவரும் போது பால், கறிவேப்பிலை மிளகுதூள் சேர்த்து கிளரி கறி திரண்டு வரும்போது இறக்கவும்.
4. ஆறியதும் எலுமிச்சம் புளிவிட்டுக் கலந்து கொள்க.

குறிப்பு:
1. பாலுக்குப் பதிலாகத் தயிர் சேர்க்கலாம்.
2. தயிர் சேர்த்தால் எலுமிச்சம் புளிவிடத் தேவையில்லை.
எண்ணெய் சேர்ப்பதால் கீரை, கிழங்கு போன்றவற்றில் உள்ள cellulose இலகுவில் சமிபாடு அடையும். 
3. அதற்காகத் தாளிதம் செய்தும் போடலாம்.

No comments:

Post a Comment